2018-10-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அரசாங்கத்தின் நிதிக்கூற்றுகளை அட்டுறு அடிப்படையில் தயாரித்தல் - சீராக்கப்பட்ட காசு அடிப்படையில் நிதிக்கூற்றுகளை தயாரிக்கும் முறைக்கு பதிலாக, அதனை கட்டம் கட்டமாக படிப்படியாக அட்டுறு அடிப்படைக்கு மாற்றுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆதலால், இலங்கையின் நிதிக்கூற்றுகளை சருவதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட கணக்கீட்டு நியமங்களுடன் இசைவுறுமாறு அட்டுறு அடிப்படையில் தயாரிக்கும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |