2018-10-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
உலக வங்கி குழுவின் அபிவிருத்தி மற்றும் மீள் கட்டமைப்பிற்கான சருவதேச வங்கி மற்றும் உலக நிதி கூட்டுத்தாபனம் ஆகிய நிறுவனங்களிலிருந்து பொது மற்றும் தெரிவுசெய்யப்பட்ட மூலதனத்தை அதிகரிப்பதற்காக இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்பை வௌிப்படுத்தல் - உலக வங்கி குழுவின் அபிவிருத்தி குறிக்கோள்களை கூடுதல் வெற்றிகரமாகவும் நிலைத்துநிற்கும் விதத்திலும் அடைந்துகொள்ளும் பொருட்டு இக் குழுவில் செய்யப்படவேண்டிய மீள் கட்டமைப்பை இக் குழு இனங்கண்டுள்ளது. அதற்கிணங்க, அரசாங்கத்தின் ஒத்துழைப்பை வௌிப்படுத்தும் பொருட்டும் பொது மற்றும் தெரிவுசெய்யப்பட்ட மூலதன அதிகரிப்புகளை அதிகரிப்பதற்காகவும் அதன் நிறுத்தி வைத்த வருமானத்தை கூறப்பட்ட தாபனத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளாக மாற்றுவதற்கும் தேவைப்படும் கொடுப்பனவுகளை செய்யும் பொருட்டும் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |