• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
விமான நிலையங்கள், விமான சேவைகள் (இலங்கை) கம்பனியினால் வழங்கப்படும் சேவைகளுக்கான அறவீடுகள் வௌிநாட்டு நாணயங்களில் செய்தல்
- விமான நிலையங்கள், விமான சேவைகள் (இலங்கை) கம்பனியினால் அதன் சேவை நாடுநர்களுக்கு வழங்கப்படும் சேவைகள் சார்பிலான அறவீடுகள் ரூபாவில் அறவிடுவதற்குப் பதிலாக வௌிநாட்டு நாணயங்களைப் பயன்படுத்தி செய்வதற்கு அங்கீகாரம் வழங்குவதன் மூலம் பெற்றுக் கொள்ளக்கூடிய நலனை கருத்திற் கொண்டு, இதன் பொருட்டு தற்போது நடைமுறையிலுள்ள சில அந்நிய செலாவணி கட்டுப்பாட்டு வரையறைகளைத் திருத்தும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.