2018-10-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அரசாங்க முதலீட்டு உருவாக்க செயன்முறையினை ஒழுங்குப்படுத்துதல் - 2025 ஆம் ஆண்டளவில் பொருளாதார ரீதியில் வளர்ச்சி கண்ட, நவீன சமூகமொன்றை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் எண்ணத்துக்கு முன்னுரிமை அடிப்படையில் வினைத்திறன் மிக்கதாக அரசாங்க முதலீடுகள் செய்யப்பட வேண்டுமென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக அரசாங்க நிறுவனங்களினூடாக கருத்திட்டங்களை இனங்காணுதல், தெரிவுசெய்தல், திட்டமிடுதல் மற்றும் இந்த கருத்திட்டங்களுக்குத் தேவையான அங்கீகாரங்களை பெற்றுக் கொள்ளும் போது பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டல் கோவையொன்றை அரசாங்க நிறுவனங்களுக்கு வழங்கும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |