2018-09-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
திரிபீடக நூலை தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்தல் - ஶ்ரீ கௌதம புத்த பெருமானின் போதனைகளை உள்ளடக்கிய திரிபீடக நூலை தேசிய மரபுரிமையொன்றாக பெயரிடுவதற்கும், அரசாங்கம் அதனை உத்தியோக பூர்வமாக பிரகடனப்படுத்துவதற்கும், அத்துடன் புத்தசாசன அமைச்சின் மேற்பார்வையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ள திரிபீடக நூல் தொடர்புபட்ட மீள் பதிப்பித்தல் மற்றும் ஏனைய செயற்பாடுகள் கருதியும் அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினாலும் புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினாலும் உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்ஷ அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |