2018-09-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலஞ்சம் மற்றும் ஊழலை தடுப்பதற்கான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தல் - "விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் ஊடாக ஊழலைத் தடுத்தல்" எனத் தலைப்பிடப்பட்ட கருதுகோள் பத்திரத்திற்கிணங்க இலஞ்சத்தையும் ஊழலையும் இல்லாதொழிப்பதற்கும் அதன் மூலம் மக்களின் மனோநிலைகளை மாற்றுவதற்கும் திறந்த அரசாங்க பங்குடமைக்கூடாக தடுக்கும் முறைமையொன்றை ஆரம்பிக்கும் பொருட்டு நிகழ்ச்சித்திட்டமொன்று அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கிணங்க, 2019 ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கூறப்பட்ட நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் அதற்குத் தேவையான நிதியங்களை பெற்றுக் கொள்வதற்கும் அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |