2018-09-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அனர்த்த அபாய பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கு அனர்த்தத்தை எதிர்கொள்வதற்கு ஏற்ற உறுதியான பொருத்து வீடுகளை நிருமாணித்தல் - இந்த நோக்கம் கருதி M/s. China Railway Beijing Engineering Group Co. Ltd., நிறுவனத்தினாலும் Yapka Construction (Pvt.) Ltd., நிறுவனத்தினாலும் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைவாக அனர்த்த அபாய பிரதேசங்களில் வசிக்கும் குடும்பங்களின் மீள்குடியேற்றம் கருதி அனர்த்தத்தை எதிர் கொள்வதற்கு ஏற்ற உறுதியான 10,000 பொருத்து வீடுகளை நிருமாணிப்பதற்கான கருத்திட்டத்தை அமுலாக்குவதற்கும் அதன் முதற்கட்டமாக 2,530.5 மில்லியன் ரூபா முதலீட்டினைக் கொண்டு இரத்தினபுரியிலும் களுத்துறையிலும் மற்றும் ஏனைய மாவட்டங்களிலும் 1,170 வீடுகளை நிருமாணிப்பதற்குமான உடன்படிக்கைகளை கைச்சாத்திடும் பொருட்டு நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |