2018-09-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அரசாங்க நிறுவனங்களுக்குச் சொந்தமான மின் பிறப்பாக்கிகளின் மேலதிக உற்பத்தி திறனை பயனுள்ள வகையில் பயன்படுத்துதல் - அரசாங்கதுறை சார்ந்த நிறுவனங்களினால் அவசர சந்தர்ப்பங்களில் பயன்படுத்தும் மின் பிறப்பாக்கிகளின் மூலம் சுமார் 200 மெகாவொட் பிறப்பிக்க முடியுமென கண்டறியப்பட்டுள்ளது. இதற்கிணங்க அவசர சந்தர்ப்பங்களில் டீசல் மின் உற்பத்தி நிலையங்களின் ஊடாக மின்சாரம் உற்பத்தி செய்வதை விட மேற்குறிப்பிட்ட மின் பிறப்பாக்கிகள் மூலம் பிரதான மின்சார வலையமைப்புக்கு மின்சாரம் வழங்கமுடியுமாயின் அது மிக நன்மை பயக்கும் மாற்று வழியொன்றென அவதானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக அரசாங்கதுறை சார்ந்த நிறுவனங்களினால் பிறப்பிக்கப்படும் மின்சாரத்தினை கொள்வனவு செய்வதற்கு இலங்கை மின்சார சபைக்கு அங்கீகாரம் வழங்கும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |