• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-09-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
காணாமற் போனோருக்கான அலுவலகத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துதல்
- காணாமற் போனோருக்கான அலுவலகத்தினால் 2018 ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையின் ஊடாக இழப்பீடு தொடர்புபட்ட சட்டப்பொறுப்புகள் சார்பில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள், இத்தகைய சம்பவங்கள் மீண்டும் ஏற்படாமலிருப்பதற்கு செய்யப்படவேண்டிய சட்ட சீர்த்திருத்தங்கள் என்பன சம்பந்தமான அதன் சிபாரிசுகளை சமர்ப்பித்துள்ளது. அதேபோன்ற பாதிக்கப்பட்ட தரப்பினர்களுக்கு நிதியுதவி நிகழ்ச்சித்திட்டங்கள், கடன்வசதி நிகழ்ச்சித்திட்டங்கள், வீடமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள், கல்வி நடவடிக்கைகளுக்குத் தேவையான சலுகைகளை வழங்கும் நிகழ்ச்சித்திட்டங்கள், தொழிற்பயிற்சி மற்றும் வாழ்க்கைத் தரத்தை விருத்தி செய்யும் நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்பிலான சிபாரிசுகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்த சிபாரிசுகளை ஆராய்ந்து பொருத்தமான தொடர் நடவடிக்கைகளை முன்மொழிவதற்காக மாண்புமிகு (கலாநிதி) விஜேதாச ராஜபக்‌ஷ அவர்களின் தலைமையில் மேலும் பத்து (10) அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்கும் உபகுழுவின் பிரேரிப்புகளை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான வசதிகளை செய்யும் பொருட்டும் அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.