• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-09-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தொழிற்சாலைகளின் நிலைமை பற்றி தொழிற்சாலை கட்டளைச் சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட கட்டளைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- சேவையில் ஈடுபட்டுள்ளவர்களின் தொழில் ரீதியிலான பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நலநோன்பல் என்பவற்றை பேணுவதற்கு ஏதுவாய் அமையும் விதத்தில் தொழில் திணைக்களத்தினால் தொழிற்சாலைகளை பரிசீலனை செய்வதற்கு தொழிற்சாலை கட்டளைச் சட்டமானது ஆக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளின் தரம் சம்பந்தமான மிக பயனுள்ள வகையில் சட்டத்தினை அமுல்படுத்தும் தேவையினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு தொழிற் சாலைகளை பதிவுசெய்தல், தொழிற்சாலை கட்டடங்களை அங்கீகரித்தல், தொழிற்சாலைகளின் நீராவி கொதிகலன்களை பதிவுசெய்தல், நீராவி கொதிகலன்கள் உட்பட ஏனைய அமுக்க கருவிகளை பரிசோதித்தல் தொடர்பிலான சான்றிதழ்களை வழங்குதல், தொழிற்சாலை ஊழியர்களை அதிக சத்தங்களில் இருந்து பாதுகாத்தல் மற்றும் தொழிற்சாலைகளை ஔியூட்டும் பொது வழிகளை ஏற்படுத்துதல் என்பன தொடர்பில் தொழிற்சாலை கட்டளைச் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் கீழ் வழங்கப்பட்டுள்ள 05 கட்டளைகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கட்டளைகளை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்குமாக தொழில் மற்றும் தொழில்சங்க உறவுகள் அமைச்சர் ரவீந்திர சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.