2018-09-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கடற்றொழில் துறைமுகங்களையும் நங்கூரமிடும் இடங்களையும், படகுத் துறைகளையும் நிருமாணிப்பதற்கும் அபிவிருத்தி செய்வதற்குமான கருத்திட்டம் - கடற்றொழில் துறைமுகங்களையும் நங்கூரமிடும் இடங்களையும், படகுத் துறைகளையும் நிருமாணிக்கும் மற்றும் அபிவிருத்தி செய்யும் கருத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே 07 கடற்றொழில் துறைமுகங்களும் படகு பணிக்களமொன்றும் 02 படகுத்துறைகளும் 03 நங்கூரமிடும் இடங்களும் விருத்தி செய்யப்பட்டுள்ளன. இந்தக் கருத்திட்டத்தின் கீழ் தொடர்ந்தும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு இனங்காணப்பட்டுள்ள பலப்பிட்டிய, சுதுவெல்ல, தொடந்தூவ, அம்பாந்தோட்டை, மயிலடி ஆகிய கடற்றொழில் துறைமுகங்களை விருத்தி செய்வதற்கும் அபிவிருத்தி செய்வதற்கும் நீர்கொழும்பு கலப்பு அபிவிருத்தி கருத்திட்டம் வெலிபட்டன்வில, தெஹிவளை, ரெக்கவ, மாவெல்ல நங்கூரமிடும் இடங்களையும் நிருமாணிப்பதற்குமான கருத்திட்டங்களை 2018 - 2020 காலப்பகுதிக்குள் அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான நிதியங்களையும் ஏனைய வசதிகளையும் ஏற்பாடு செய்யும் பொருட்டு கடற்றொழில், நீரகவளமூல அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |