2018-09-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கட்டடங்களின் மதிப்பீடு மற்றும் தர அறிக்கையிடல் தொடர்பான வழிமுறையொன்றை மேம்படுத்துதல் - கட்டடங்களின் கட்டமைப்பு ரீதியிலான நிலைபேறான தன்மை, காலத்திற்கேற்ப கட்டடங்களின் கட்டமைப்பு ரீதியிலான பகுதிகளுக்கு ஏற்படும் சேதம், திருத்த வேலைகள் மற்றும் புதிதாக பகுதிகளைச் சேர்த்தல் போன்ற பணிகள் தொடர்பில் மதிப்பிட்டு பொருத்தமான தொழினுட்ப சிபாரிசுகளை வழங்குவதன் மூலம் கட்டடங்களை பயன்படுத்துபவர்களினதும் அண்டையில் வசிப்பவர்களினதும் பாதுகாப்பினை உறுதிசெய்யும் பொருட்டு தேசிய கட்டடங்கள் ஆராய்ச்சி அமைப்பினால் 'கட்டடங்களின் மதிப்பீடு மற்றும் தர அறிக்கையிடல் தொடர்பான வழிமுறையொன்றை' அறிமுகப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வழிமுறையினை மேம்படுத்துவதற்குத் தேவையான நிதியினைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |