• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-09-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
காலி புகையிரத பாலத்தை மீள நிருமாணித்தல்
- காலி - மாத்தறை புகையிரத வீதியின் மோட கால்வாயின் குறுக்காக நிருமாணிக்கப்பட்டுள்ள ஒடுங்கிய பாலத்தின் காரணமாக வௌ்ளநீர் வழிந்தோடுவதற்கு உள்ள தடையின் விளைவாக இந்த பாலத்தை அப்புறப்படுத்தி, புதிய பாலமொன்றை நிருமாணிக்கும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. உத்தேச பாலம் நிருமாணிக்கப்படும் வரை போக்குவரத்துக்காக தற்காலிக புகையிரத பாலமொன்றையும் புகையிரத வீதியொன்றையும் நிருமாணிப்பதற்குத் தேவையான நிதியினை வழங்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.