• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-09-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மடு நீர் வழங்கல் கருத்திட்டம்
- 400 வருடங்களுக்கு மேலான வரலாற்றினைக் கொண்ட மடு தேவாலயம் கத்தோலிக்க மக்களினதும் அதே போன்று ஏனைய மதத்தினரதும் மதிப்புக்கு ஆளான புண்ணிய பூமியாகும். இந்த புண்ணிய பூமிக்கு வருகைதரும் யாத்திரிகர்களுக்கு நீர் வழங்குவதற்காக பயன்படுத்தப்பட்டு வரும் நீர் விநியோக முறைமைக்கு முறையான நீர் சுத்திகரிப்பு வசதிகளை செய்யும் பொருட்டு 554 மில்லியன் ரூபாவைக் கொண்ட முதலீட்டில் மடு நீர்த்தேக்கத்தை பயன்படுத்தி நாளொன்றுக்கு 1,000 கனமீற்றர் நீரினை வழங்கக்கூடியவாறு மடு நீர் வழங்கல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.