• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-09-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
காலநிலை மாற்றங்களின் பாதகமான தாக்கங்களை குறைத்துக் கொள்வதற்குத் தேவையான சருவதேச விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் நிதி உதவிகளை பெற்றுக் கொள்தல்
- பாதகமான காலநிலை தாக்கங்களை குறைப்பதற்குரிய செயற்பாடுகளை இணைத்து நடைமுறைப்படுத்தும் மற்றும் சருவதேச சுற்றாடல் உடன்படிக்கைகளை தேசிய ரீதியில் நிறைவேற்றுவதற்குத் தேவையான சருவதேச ஒத்துழைப்பினை பெற்றுக் கொள்ளும் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு சருவதேச நிறுவனங்களுடன் உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் முக்கியத்துவம் இனங்காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக, பசுமை காலநிலை நிதியம், விவசாய வன ஆராய்ச்சி தொடர்பான சருவதேச மன்றம் ஆகியவற்றுடன் உபசரனை நாடு உடன்படிக்கையினை செய்துகொள்வதற்கும் உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்தில் உறுப்புரிமையை பெற்றுக் கொள்வதற்கு விருப்பினை அறிவிப்பதற்கும் இந்த நிறுவனத்தின் உடன்படிக்கைக்கு செயல்வலுவாக்கம் அளிப்பதற்குமாக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.