• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-09-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உணவு உற்பத்தி தேசிய நிகழ்ச்சித்திட்டம்
- உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய சகல உணவு வகைகளையும் தரம்மிக்கதாக நாட்டிலேயே உற்பத்தி செய்வதன் மூலம் உணவு பொருட்களை இறக்குமதி செய்வதற்காக செலவிடப்படும் அந்நிய செலாவணியை குறைத்துக் கொள்ளும் நோக்கில், உணவு உற்பத்தி தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆயினும், கடந்த காலத்தில் நிலவிய சீரற்ற காலநிலை காரணத்தினால் இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக எதிர்பார்க்கப்பட்ட குறியிலக்கினை அடையும் பணி கடினமாய் அமைந்துள்ளது. ஆதலால், நாடு முழுவதும் உள்ள நீர்ப்பாசன முறைமைகளை மறுசீரமைத்தல், விவசாயிகளிடத்தில் நவீன தொழினுட்ப முறைகளை பிரசித்தப்படுத்தல், கமத்தொழில், கடற்றொழில் மற்றும் கால்நடை துறைகளில் ஈடுபட்டுள்ளவர்களை தொழில்முயற்சியாளர்களாக வலுவூட்டுதல் மற்றும் இந்த துறை சார்பில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி பயன்பாட்டினை மேம்படுத்துதல், உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் உணவு உற்பத்தி துறைக்குரிய ஆராய்ச்சிகளை ஊக்குவித்தல் போன்ற நோக்கங்களை உள்ளடக்கிய இந்த நிகழ்ச்சித்திட்டத்தை 2019 மற்றும் 2020 வரை நீடிப்பதற்கும் அதற்குத் தேவையான நிதியினை ஏற்பாடு செய்துகொள்வதற்குமாக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.