2018-09-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள மாதிரி கிராமங்களைச் சேர்ந்த பயனாளிகளின் மேம்பாட்டிற்காக கிராமிய பாலங்களை நிருமாணித்தல் - அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உட்கட்டமைப்பு வசதிகள் குறைவாகவுள்ள கிராமங்களில் அமுல்படுத்தப்படும் மாதிரி கிராமங்களைச் சேர்ந்த வீட்டுப் பயனாளிகளுக்கு நகர பொது வசதிகள் இலகுவாக சென்றடையக்கூடிய விதத்தில் வலஸ்முல்ல பல்லேகந்த வீதியில் யாய பாலம், மெதகொட கும்புக்முல்ல ஊருபொக்க ஓயாவுக்கு குறுக்காக அமைக்கும் பாலம், தளுன்ன மற்றும் அந்துபெலனவை இணைக்கும் பாலம் மற்றும் பால பெரகம பால விரிவாக்கம் ஆகிய நான்கு கருத்திட்டங்களையும் "நகமு புரவர" நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நிருமாணிக்கும் பொருட்டு வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |