• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-09-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தலைமைத்துவ திறன்களைக் கொண்ட இளைஞர்களை வலுவூட்டுதல்
- இலங்கையில் நிலைபேறுடைய அபிவிருத்தி இலக்குகளையடைவதற்கு இளைஞர்களை வலுவூட்டும் நோக்கில் சனாதிபதி செயலகத்தில் "நிலைபேறுடைய அபிவிருத்தி பிரிவின்" மூலம் "இலங்கையின் நிலைபேறுடைய அபிவிருத்தி நோக்கினை அடையும் பொருட்டு பொறுப்புடன் தலைமை தாங்குவதற்கும் தலைமை பண்புகளுடன் இளைஞர்களை வலுவூட்டும் கருத்திட்டம்" என்னும் பெயரில் நிகழ்ச்சித்திட்டமொன்று மூன்று பிரதான கட்டங்களின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்கும் அதற்குத் தேவையான நிதி ஏற்பாட்டினை 2019-2021 நடுத்தவணைக்கால வரவுசெலவுத்திட்ட கட்டமைப்பின் கீழ் பெற்றுக் கொள்வதற்கும் அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.