2018-09-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
உத்தேச பயங்கரவாத தடைச்சட்டம் - பயங்கரவாதத்திலிருந்தும் பயங்கரவாதம் சார்ந்த செயற்பாடுகளிலிருந்தும் இலங்கை மக்களை பாதுகாக்கும் நோக்கில் உரிய சகல தரப்பினர்களுடனும் கலந்துரையாடி தயாரிக்கப்பட்டுள்ள பயங்கரவாத தடைச்சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரித்து பராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் இந்த சட்டமூலத்திற்கு மேலும் செய்யப்பட வேண்டிய திருத்தங்கள் இருப்பின் அவற்றை பாராளுமன்ற குழுநிலை சந்தர்ப்பத்தில் பரிசீலனை செய்யும் பொருட்டும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |