2018-09-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பதுளை - செங்கலடி வீதியை விருத்தி செய்யும் கருத்திட்டத்தின் கீழ் டம்பிட்டியவிலிருந்து செங்கலடி வரை 27.75 கிலோ மீற்றர்களை புனரமைத்தலும் விருத்தி செய்தலும் - பதுளை - செங்கலடி வீதியை விருத்தி செய்யும் கருத்திட்டம் பிரதான 03 ஆக்கக்கூறுகளின் கீழ் அபிவிருத்திக்கான சவுதி நிதியத்தினால் வழங்கப்படும் நிதியுதவியின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும். அதன் மூன்றாவது கட்டமாக பதுளை - செங்கலடி வீதியின் 249.8 கிலோ மீற்றரிலிருந்து 277.55 கிலோ மீற்றர் வரை டம்பிட்டியவிலிருந்து செங்கலடி வரையிலான வீதிப் பகுதியை புனரமைப்பதற்கும் விருத்தி செய்வதற்குமான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 2,837.43 மில்லியன் ரூபாவைக் கொண்ட வரியற்ற தொகைக்கு M/s Maga Engineering (Pvt) Ltd., நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹஷிம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |