2018-09-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தை தாபிப்பதற்குத் தேவையான கட்டடங்களை நிருமாணித்தல் - இலங்கை சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தை 5,015 மில்லியன் ரூபா முதலீட்டில் இரத்தினபுரி பொது வைத்தியசாலைக்கு அருகாமையில் அமைந்துள்ள 20 ஏக்கர் காணியில் தாபிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மருத்துவ பீடத்தின் பணிகளை துரிதமாக ஆரம்பிக்கும் தேவையினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு இதற்கு அத்தியாவசியமான மருத்துவ மற்றும் துணை விஞ்ஞான பீடத்திற்கான சிகிச்சை கட்டடத்தினை நிருமாணிப்பதற்கும் அதற்குத் தேவையான நிதியினை பெற்றுக் கொள்ளும் பொருட்டும் உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |