• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-09-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ரஜரட்டை, கொழும்பு, றுகுணு, மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல்
- அரசாங்க பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை படிப்படியாக அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளமையினால் மாணவர்களுக்கு தரம் மிக்க உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கும் பொருட்டு ரஜரட்டை, கொழும்பு, றுகுணு, மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக, ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்திற்கு விரிவுரை மண்டபம் அடங்கலாக ஆய்வுகூட கட்டடத் தொகுதியொன்றை நிருமாணித்தல் அதன் மிஹிந்தலை மாணவர் விடுதி மனையிடத்தில் சிற்றுண்டிச்சாலையொன்றை நிருமாணித்தல் கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைபீடம் சார்பில் புதிய கட்டடத்தின் முதலாம் கட்டத்தை நிருமாணித்தல், கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய சுகாதார பாதுகாப்பு விஞ்ஞான பீடத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் றுகுணு பல்கலைக்கழகத்தின் இணை சுகாதார விஞ்ஞான பீட கட்டடத்தின் முதலாம் கட்டத்தை நிருமாணித்தல் உட்பட அதன் பிரதான கட்டடத்தின் திருத்த வேலைகள் போன்ற அபிவிருத்தி பணிகளை 3,690.42 மில்லியன் ரூபாவைக் கொண்ட முதலீட்டில் மேற்கொள்ளும் பொருட்டு உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்‌ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.