• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-09-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மத்துகம, காலி, பெலியத்த , மாத்தறை மற்றும் பல்லேகல சார்பில் மின்வலைப்பின்னல் உப நிலையங்களை நிருமாணித்தல்
- 'சூர்யபலசங்கிராமய' நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இலங்கை முழுவதும் மத்திய மின்சார வலயமைப்புடன் சேர்க்கும் விதத்தில் 01 மெகாவொட் வீதம் கொண்ட 90 சூரிய ஔிமின்னழுத்த மின் நிலையங்களை நிருமாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது இந்த மின் நிலையங்களை மின்சார முறைமைக்குள் இணைப்பதற்காக நிருமாணிக்கப்படவேண்டிய மின்வலைப்பின்னல் உப நிலையங்களிலிருந்து மத்துகம, காலி, பெலியத்த, மாத்தறை மற்றும் பல்லேகல சார்பில் 05 மின்வலைப்பின்னல் உப நிலையங்கள் நிருமாணிப்பதற்கு அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு உரிய ஒப்பந்தத்தை வழங்கும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.