2018-09-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
நெதர்லாந்து நிதி உதவியின் கீழ் ஹம்பாந்தோட்டை, நுவரேலியா மாவட்ட பொது மருத்துவசாலைகளை அபிவிருத்தி செய்தல் - ஹம்பாந்தோட்டை, நுவரேலியா மாவட்ட பொது மருத்துமனைகளை நிருமாணித்தல் உட்பட அவற்றுக்குத் தேவையான உபகரணங்களை வழங்கும் கருத்திட்டங்கள் நெதர்லாந்து நிதி உதவியின் கீழ் மேற்கொள்வதற்கு 2012 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டிருந்த போதிலும், இந்த கருத்திட்டங்கள் பல்வேறுபட்ட காரணங்களினால் இதுவரை பூர்த்தி செய்வதற்கு இயலாமற் போயுள்ளதன் காரணமாக இந்த மருத்துவமனைகளுக்குத் தேவையான உபகரணங்கள் சார்பில் ஏற்கவேண்டிய செலவானது கணிசமான அளவு அதிகரித்துள்ளது. ஆயினும், இந்த பிரதேச மக்களின் தேவைகளை துரிதமாக நிறைவேற்றும் தேவையினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு இந்த மருத்துவமனைகளுக்கு உரிய தகவுதிறன்களுக்கு அவைவாக நவீன உபகரணங்களை பெற்றுக் கொள்ளும் பொருட்டு தேவையான அங்கீகாரத்தையும் நிதியினையும் பெற்றுக் கொள்ளும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |