• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-09-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பண்டாரவளை, தியத்தலாவை மற்றும் அப்புத்தளை ஒன்றிணைந்த நீர்வழங்கல் கருத்திட்டத்தின் நீர் உள்வரும் கட்டமைப்பினை நிருமாணித்தல்
- உமாஓயா பல்பணி அபிவிருத்தி கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது பாதிக்கப்பட்டுள்ள 63 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் குடியிருப்பவர்களின் தற்போதைய மற்றும் எதிர்கால நீர் தேவையினை ஈடுசெய்யும் பொருட்டு பண்டாரவளை, தியத்தலாவை மற்றும் அப்புத்தளை ஒன்றிணைந்த நீர்வழங்கல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, உமாஓயா கருத்திட்டத்தின் கீழ் நிருமாணிக்கப்படும் டயபரா நீர்த்தேக்கம் இந்த கருத்திட்டத்தின் நீர் தோற்றுவாயாக இனங்காணப்பட்டுள்ளது. தற்போது டயபரா நீர்த்தேக்கத்தின் நிருமாணிப்பு பணிகள் முற்றாக்கப்பட்டு வருகின்றமையினால் இந்த நீர்த்தேக்கம் நிரப்பப்படுவதற்கு முன்னர் நீர் உள்வரும் கட்டமைப்பினை நிருமாணிக்க வேண்டுமென்பதனால் இந்த ஒப்பந்தத்தை மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்தையும் / வரையறுக்கப்பட்ட மத்திய பொறியியல் சேவை கம்பனியையும் கொண்டு செய்து கொள்ளும் பொருட்டும் இதற்காகத் தேவைப்படும் நிதியினை பெற்றுக் கொள்ளும் பொருட்டும் நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.