• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-09-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சொத்துகளை பதிவு செய்யும் பொறிமுறையை விருத்தி செய்வதற்கான ஒருங்கிணைந்த e-Land Registry கருத்திட்டம்
- சொத்துகளை பதிவு செய்யும் போது காணி பற்றிய தகவல்களை பெற்றுக் கொள்ளும் ஆற்றலை விருத்தி செய்வதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு தொழில் முயற்சிகளை இலகுபடுத்துதல் தொடர்பிலான சுட்டெண்ணில் இலங்கையின் நிலையினை உயத்தும் நோக்கில் e-Land Registry கருத்திட்டம் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. சொத்து ஒன்றை பதிவு செய்வதற்காக நிலவும் வழிமுறையின்படி 51 நாட்கள் செல்வதோடு, இதன் பொருட்டு 09 படிமுறைகள் பின்பற்றப்படுதல் வேண்டும். e-Land Registry கருத்திட்டம் நடைமுறைப்படுத்துவதன் மூலம் இதன் காலம் 05 நாட்களாகவும் 02 படிமுறைகளாகவும் குறைப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. 2018 ஆம் ஆண்டில் இந்த நிகழ்ச்சித்திட்டத்தை மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப் பட்டுள்ளது. இதற்கமைவாக எதிர்வரும் காலங்களில் இந்தக் கருத்திட்டத்தை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தும் பொருட்டு தேவையான நிதியேற்பாடுகளை ஒதுக்கிக்கொள்ளும் பொருட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன அவர்களினாலும் திறமுறை அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.