2018-09-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மிருக பலிகளைத் தடுப்பதற்கு சட்டங்களை ஆக்குதல் - புராதன, மத வழக்காறு ஒன்றாக கருதப்படும் மிருக பலி பூஜைகளை சில இந்து ஆலயங்களில் தற்போதும் பகிரங்கமாக மேற்கொண்டு வரும் சம்பவங்கள் உள்ள போதிலும் பெரும்பாலான இந்து மத பக்தர்கள் இதற்கு உடன்படாமை தெரியவந்துள்ளது. தற்போது இந்து ஆலயங்களில் மிருக பலி பூஜைகள் நடாத்தப்படுவதனை இந்தியா தடை செய்துள்ளது. இதற்கமைவாக இலங்கையிலும் ஆலயங்களின் உள்ளே அல்லது அதன் எல்லைகளின் உள்ளே மேற்கொள்ளப்படும் மிருக மற்றும் பறவை பலி பூஜைகளை தடை செய்யும் பொருட்டிலான சட்டங்களை ஆக்குவதற்கும் இதன் சார்பில் வரையப்பட்டுள்ள வரைவினை அடிப்படையாக கொண்டு பொருத்தமான சட்டங்களை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்குவதற்குமாக மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |