• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-09-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மாதிரி கிராம வீடமைப்புத் திட்டங்களில் சூரிய சக்தி கலங்களை பொருத்தும் கருத்திட்டம்
- வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சின் ஊடாக நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் மாதிரி கிராமங்களில் குடியிருக்கும் மக்களின் பொருளாதார மட்டத்தை மேம்படுத்தும் நோக்கில் தற்போது அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் 'சூர்யபலசங்கிராமய' கருத்திட்டத்தின் கீழ் தனியார் தொழில்முயற்சியாளர்களின் பங்குபற்றுதலுடன் இந்த மாதிரி கிராமங்களில் சூரியசக்தி கலங்களைப் பொருத்தும் கருத்திட்டமொன்றினை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பொருத்தமான முதலீட்டாளர்களை இனங்காண்பதற்கான பிரேரிப்புகளை அழைக்கும் பொருட்டு வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.