2018-09-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
யாவருக்கும் புகலிடம் மாதிரி கிராம கருத்திட்டத்தின் கீழ் வடக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் 1,200 வீடுகளை நிருமாணித்தல் - அரசாங்கத்தினால் நாடுதழுவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் கிராமசக்தி மாதிரி கிராம நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வடக்கு மாகாணத்தின் 25 கிராமங்களில் 600 வீடுகளையும் தெற்கு மாகாணத்தின் 25 கிராமங்களில் 600 வீடுகளையும் நிருமாணிப்பதற்காக இந்திய அரசாங்கத்தினால் 600 மில்லியன் ரூபாவைக் கொண்ட நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதோடு, இதற்கிணங்க இந்த கிராமங்களில் நிருமாணிப்பு பணிகள் தற்போது ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வட மாகாணத்தில் மேலும் 600 வீடுகளையும் தெற்கு மாகாணத்தில் மேலும் 600 வீடுகளையும் நிருமாணிப்பதற்கு நிதி உதவி வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ள உடன்பாட்டுக்கு அமைவாக இந்த வீடுகளை நிருமாணிக்கும் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் இதன் பொருட்டு புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுவதற்கும் இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வழிநடத்தல் குழுவொன்றைத் தாபிப்பதற்குமாக வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |