• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-09-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் சாம்பல் சேகரிக்கப்படும் இடத்தில் குவிக்கப்பட்டுள்ள சாம்பலை சூழல்நேய முறையில் அகற்றுதல்
- நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் நிலக்கரி எரிக்கப்படுவதன் விளைவாக ஒன்றுசேர்ந்துள்ள சாம்பல் காரணமாக அருகாமையிலுள்ள கிராமங் களைச் சேர்ந்த மக்களுக்கும் சூழலுக்கும் ஏற்பட்டுள்ள பாதகமான தாக்கங்களை தடுக்கும் பொருட்டு இதனை துரிதமாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுதல் வேண்டும். இதன் ஒரு கட்டமாக குறித்த சாம்பலை பயன்படுத்தி சூழல்நேய உற்பத்திகளுக்காக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்போது இந்த சாம்பலை பயன்படுத்தி செங்கல் உற்பத்திக்காக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரிப்புக்கு அமைவான இந்த சாம்பலை சுற்றுச்சூழலுக்கு கொண்டு செல்லாமல் அனல்மின் நிலையத்தின் சாம்பல்முனைவிடம் அமைந்துள்ள பிரதேசத்திலேயே உற்பத்தி பணிகளை மேற்கொள்வதற்காக வழங்குவதன் மூலம் அகற்றுவதற்காக மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.