• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-09-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இரத்தினபுரி மாகாண பொது வைத்தியசாலையை போதனா வைத்தியசாலையொன்றாக தரமுயர்த்துதல்
- சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்துக்கு 2018 ஆம் ஆண்டின் இறுதியில் 75 பட்டதாரி அபேட்சகர்களைக் கொண்ட முதலாவது மருத்துவ மாணவர்கள் குழுவினை ஆட்சேர்ப்புச் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாணவர்களுக்கு சிகிச்சை பயிற்சியினை வழங்குவதற்கு இரத்தினபுரி மாகாண பொது வைத்தியசாலையை போதனா வைத்தியசாலையொன்றாக தரமுயர்த்த வேண்டியுள்ளது. இதற்கமைவாக, இலங்கை சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தின் புதிய மருத்துவ பீடத்துடன் இணைந்த வைத்தியசாலையொன்றாக செயலாற்றுவதற்கு இயலுமாகும் வகையில் இரத்தினபுரி மாகாண பொது வைத்தியசாலையை போதனா வைத்தியசாலையொன்றாக தரமுயர்த்தும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.