2018-09-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தேசிய சுகாதார ஆராய்ச்சி சபையொன்றைத் தாபித்தல் - சுகாதார ஆராய்ச்சிகளை ஒழுங்குறுத்துதல், ஒருங்கிணைத்தல், மேற்பார்வை, அபிவிருத்தி மற்றும் முகாமைத்துவம் சார்பில் தேசிய மட்டத்தில் "தேசிய சுகாதார ஆராய்ச்சி சபையொன்றைத்" தாபிக்கும் பொருட்டு தேவையான சட்டங்களை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |