2018-09-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
வசந்தம் தொலைக்காட்சி அலைவரிசையின் ஒளிபரப்பு பிரதேசத்தை விருத்தி செய்தல் - தமிழ் மொழி பேசும் மக்களுக்காக சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலயமைப்பு வசந்தம் தொலைக்காட்சி அலைவரிசையை ஆரம்பித்ததோடு இதன் முதற்கட்டத்தின் கீழ் கொழும்பு மற்றும் அதற்கு அண்மித்த பிரதேசங்களை தழுவி நேயர்களுக்கு சேவை வழங்கியது. இது பின்னர் யாழ்ப்பாணம், கிழக்கு மாகாணம் மற்றும் கொக்காவில் பிரதேசங்கள் வரை விஸ்தரிக்கப்பட்டது. இதற்கிணங்க, நாடு முழுவதும் ஏனைய பிரதேசங்களில் வசிக்கும் தமிழ் மொழி பேசும் நேயர்களுக்கு இந்த அலைவரிசையின் நிகழ்ச்சிகளை காண்பதற்கு வசதிகளை செய்யும் விதத்தில் 304 மில்லியன் ரூபாவைக் கொண்ட முதலீட்டினைப் பயன்படுத்தி ஒளிபரப்பு வசதிகளை விருத்தி செய்யும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |