2018-09-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தகவல் அறிந்துகொள்ளும் உரிமை தொடர்பில் பொதுமக்களுக்கு அறியச் செய்விக்கும் நாடு தழுவிய நிகழ்ச்சித்திட்டம் - மக்களின் தகவல் அறிந்து கொள்ளும் உரிமையை உறுதிப்படுத்திய நாடுகளில் இணைந்துள்ள இலங்கை உலகின் மூன்றாவது சிறந்த தகவல் அறிந்து கொள்ளும் உரிமை பற்றிய சட்டத்துக்கு உரிமை கொண்டாடுகின்றது. இதற்கிணங்க, 2018 ஆம் ஆண்டை 'மக்களுக்கு அறியச் செய்விக்கும்' ஆண்டாக பெயர் குறிப்பிட்டு செப்ரெம்பர் மாதம் 28 ஆம் திகதியன்று வரும் தகவல் அறிந்து கொள்ளும் உரிமை பற்றிய சருவதேச தினத்திற்கு ஒருங்கிணைவாக செப்ரெம்பர் மாதம் 21 ஆம் திகதியிலிருந்து 28 ஆம் திகதி வரையான காலப்பகுதியினை தகவல் வாரமாக பிரகடனப்படுத்துவதற்கும் பொதுமக்களின் நலனின் பொருட்டு தகவல் அறிந்துகொள்ளும் உரிமையினை பயன்படுத்தும் முறைபற்றி பொதுமகக்ளுக்கு அறியச் செய்விப்பதற்கும் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 'கிராமத்துக்கு தகவல் அறியும் உரிமை' என்னும் பெயரில் தகவல் அறிந்து கொள்ளும் சட்டம் தொடர்பிலான நடமாடும் சேவையை நடைமுறைப் படுத்துவதற்கும் நாடு முழுவதிலுமுள்ள பாடசாலைகளை தழுவும் விதத்தில் இது தொடர்பில் பல்வேறுபட்ட போட்டிகளை நடாத்துவதன் மூலம் பாடசாலை மாணவர்களுக்கு அறியச் செய்விப்பதற்கும் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |