2018-09-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மருத்துவர் நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையை இலங்கை விமானப் படைக்கு உடமையாக்கி கொள்ளுதல் - SAITM மருத்துவ பீடத்தில் நீண்டகாலமாக நிலவிய பிரச்சினைக்குத் தீர்வொன்றாக இங்கு கல்வி கற்றுக்கொண்டிருந்த அண்ணளவாக 900 மருத்துவ மாணவர்கள் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு உள்ளீர்க்கப்பட்டுள்ளார்கள். SAITM மருத்துவ பீடத்துடன் இணைந்து செயற்பட்ட மருத்துவர் நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையை இலங்கை விமானப் படைக்கு உடமையாக்கி கொள்வது தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரிப்பினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, இது சம்பந்தமாக இணக்கப் பேச்சுகளை நடாத்துவதற்காக உத்தியோகத்தர்கள் குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |