2018-09-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சுற்றுலாத்துறை மேம்பாடு - உயர் கொள்வனவு சக்தியினைக் கொண்ட அபிவிருத்தி அடைந்த நாடுகளைச் சேர்ந்த உல்லாச பயணிகளை இலங்கையின்பால் கவர்ந்திழுப்பதற்கும் அவர்கள் கூடிய நாட்கள் இலங்கையில் தங்கியிருப்பதற்கும் இந்த உல்லாச பயணிகளுக்கிடையில் இலங்கையை கவர்ச்சிகரமான அமைவிடமொன்றாக ஊக்குவிக்கும் நிகழ்ச்சித்திட்டங்களை உலகளாவிய ரீதியில் மேற்கொள்வதற்கும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்கிணங்க, இந்த சுற்றுலா மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டங்களை சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள் அமைச்சினால் உரிய நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் கொண்ட குழுக்களின் சிபாரிசுகளின் மீது மேற்கொள்ளும் பொருட்டு சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
|