2018-09-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
போதைபொருள் சம்பந்தமான குற்றவாளிகளை சீர்திருத்தும் கருத்திட்ட - போதைபொருள் சம்பந்தமான குற்றவாளிகளை சீர்திருத்துவதன் மூலம் போதைபொருள் பாவனையிலிருந்து மீட்டு அவர்களுடைய பொருளாதார நிலையை பலப்படுத்துவதற்கு சுய தொழிலில் ஈடுபடுத்தும் முன்னோடிக் கருத்திட்டமொன்று வடமேல் மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முன்னோடிக் கருத்திட்டத்தின் வெற்றியின் மீது இந்த கருத்திட்டத்தை 2019 ஆம் ஆண்டிலிருந்து வடமேல், தெற்கு, சப்பிரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நிதியேற்பாடுகளை பெற்றுக் கொள்ளும் பொருட்டு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் (திருமதி) தலதா அத்துகோரல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |