• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-09-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
திட்டமிட்ட குற்றச் செயல்களை தடுத்தல் பற்றிய தெற்காசிய வலய புலனாய்வு தகவல் பரிமாறல் மற்றும் ஒருங்கிணைப்பு நிலையத்தைத் தாபித்தல் தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்ளல்
- ஐக்கிய நாடுகளின் போதைபொருள் மற்றும் குற்றச் செயல்கள் பற்றிய பணியகத்தின் தெற்காசிய வலய அலுவலகத்தின் மூலம் செயற்படுத்தப்படும் "தெற்காசிய போதைபொருள் பற்றிய சட்டத்தினை அமுல்படுத்தும் ஆற்றலை பலப்படுத்துதல்" தொடர்பிலான கருத்திட்டத்தின் ஒருங்கிணைப்பு நிலையத்தை இலங்கையில் தாபிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இந்த நிலையத்தின் உறுப்பு நாடுகளான இந்தியா, நேபாளம், மாலைதீவு, பங்களாதேஷ், பூட்டான் மற்றும் இலங்கைக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்ளும் பொருட்டு பொது நிருவாகம், முகாமைத்துவம் மற்றும் சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.