2018-09-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
2008 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க போதை மருந்து மற்றும் மனநிலையை பாதிக்கக்கூடிய பதார்த்தங்களின் சட்ட விரோத வியாபாரத்திற்கு எதிரான சமவாயத்திலுள்ள ஏற்பாடுகளை திருத்துதல் - இலங்கை 1988 இல் போதை மருந்து மற்றும் மனநிலையை பாதிக்கக்கூடிய பதார்த்தங்களின் சட்ட விரோத வியாபாரத்திற்கு எதிரான ஐக்கிய நாடுகள் சமவாயத்தில் கைச்சாத்திட்டுள்ளதோடு, இந்த சமவாயத்தின் சருவதேச கடப்பாடுகளுடன் இணைந்த பொறுப்புக்கூறலை நிறைவேற்றும் பொருட்டு 2008 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க போதை மருந்து மற்றும் மனநிலையை பாதிக்கக்கூடிய பதார்த்தங்களின் சட்ட விரோத வியாபாரத்திற்கு எதிரான சமவாய சட்டத்தை அங்கீகரிப்பித்துக் கொண்டுள்ளது. ஆயினும் இந்த பொருட்களின் சட்ட விரோத வியாபாரம் மற்றும் பாவனையை தடுப்பது உள்நாட்டிலும் சருவதேச ரீதியிலும் கடும் சவால்மிக்கதாக மாறியுள்ளது. இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு உள்நாட்டிலும் சருவதேச ரீதியிலும் முனைப்புடன் முகங்கொடுக்கக் கூடிய சட்ட முறைமையொன்றை தாபிப்பதன் மூலம் 2008 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க போதை மருந்து மற்றும் மனநிலையை பாதிக்கக்கூடிய பதார்த்தங்களின் சட்ட விரோத வியாபாரத்திற்கு எதிரான சமவாய சட்டத்தை திருத்துவதற்காக பொது நிருவாகம், முகாமைத்துவம் மற்றும் சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |