• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-09-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அனர்த்தங்களை குறைக்கும் நடவடிக்கைகளின் மூலம் மண்சரிவு அபாயத்தைக் குறைத்தல்
- காலநிலை மாற்றங்களினால் உருவாகும் சீரற்ற காலநிலைமை காரணமாக மலையக பிரதேசங்களில் மண்சரிவு ஏற்படக்கூடிய இடங்கள் மற்றும் உறுதியற்ற சரிவுகள் போன்றவற்றை இனங்கண்டு இவற்றின் ஊடாக உருவாகக்கூடிய அனர்த்தங்களை குறைக்கும் கருத்திட்டமொன்றினை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 104 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட முதலீட்டில் கூறப்பட்ட கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் இதன் பொருட்டு தேவையான நிதியுதவியினை ஆசிய உட்கட்டமைப்பு வசதிகள் முதலீ்ட்டு வங்கியின் நிதியூடாக பெற்றக் கொள்வதற்குமாக நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.