2018-09-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
யாழ்ப்பாண குடாநாட்டு மக்களுக்கு குடிநீர் வழங்குதல் - வடமராட்சி களப்பில் நீர்வளத்தினை பயன்படுத்தி யாழ்ப்பாண குடாநாட்டில் வசிக்கும் மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் உத்தேச கருத்திட்டம் தொடர்பில் செய்யப்பட்டுள்ள சாத்தியதகவாய்விற்கு அமைவாக 2,000 மில்லியன் ரூபா கொண்ட முதலீட்டுடன் குடிநீர் வழங்கும் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினாலும் நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |