• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-09-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மன்னார் மாவட்டத்தில் தாராபுரம் கூட்டுறவு கிராம நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
- மன்னார் மாவட்டத்தில் தாராபுரம் கூட்டுறவு கிராம நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைகளுக்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள நிதியேற்பாடுகளை பயன்படுத்தி தற்போது நிருமாணிக்கப்பட்டுவரும் பல்நோக்க கட்டடத்தின் அடுத்த கட்டமாக மாநாட்டு நிலையமொன்றை நிருமாணிக்கும் பொருட்டு கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது