• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-09-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பேரூந்து மற்றும் புகையிரத போக்குவரத்தின் போது பயன்படுத்தக்கூடிய முற்கொடுப்பனவு அட்டையொன்றை அறிமுகப்படுத்துதல்
- இலங்கையில் பொது போக்குவரத்து சேவையை நவீனமயப்படுத்தும் பொருட்டும் பிரயாணிகளின் வசதிகள் கருதியும் மின்னணு கொடுப்பனவு முறையொன்றுக்கு ஊடாக முற்கொடுப்பனவு அட்டை முறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இதன் பொருட்டு தேவைப்படும் நியமத் தரம் வாய்ந்த பொதுவான அட்டைக்கான கட்டமைப்பொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான வசதிகளை செய்வதற்காக போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.