2018-09-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
நேபாளத்திலுள்ள ஶ்ரீலங்கா மகா விஹாரையை புனரமைத்தல் - கௌதம புத்த பெருமான் அவர்களின் பிறப்பு நிகழ்ந்த நேபாளம் லும்பினி புண்ணிய பூமிக்கு அருகாமையில் அமைந்துள்ள ஶ்ரீலங்கா மகா விஹாரை பௌத்த யாத்திரிகர்களின் வழிபாட்டுக்கு உட்பட்ட புண்ணிய பூமியொன்றாகும். இந்த புண்ணிய பூமியை தேரவாத பௌத்த தர்மத்தினை சிறப்பாக எடுத்துக் காட்டும் வழிபாட்டுத் தலமொன்றாக அபிவிருத்தி செய்யும் நோக்கில் இங்கு மேலும் செய்யப்பட வேண்டிய திருத்த வேலைகளுக்குத் தேவையான நிதியேற்பாடுகளை பெற்றுக் கொள்ளும் பொருட்டு புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |