• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-08-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2018 ஆம் ஆண்டை தேசிய உணவு உற்பத்தி ஆண்டாக பிரகடணப்படுத்தல்
- கடந்த ஆண்டுகளில் தாக்கத்தைச் செலுத்திய வரட்சி மற்றும் வௌ்ளப்பெருக்கு போன்ற சீரற்ற காலநிலை காரணமாக பின்னடைந்த கமத்தொழில் பணிகளை புத்துணர்ச்சியுடன் ஆரம்பிப்பதற்கு செய்கை பண்ணப்படாது கைவிடப்பட்டுள்ள வயல்களை மீண்டும் செய்கை பண்ணி, பயிர்செய்கை பண்ணக்கூடிய ஏனைய காணிகள் சகலவற்றையும் பயிர்ச்செய்யும் நோக்கங்களுக்காக பயன்படுத்துவதற்கும் பயிர்ச்செய்கைக்குத் தேவையான விதை மற்றும் நடுகைப் பொருட்கள் போன்றவற்றை உற்பத்தி செய்வதற்கும் தொடர்புபட்ட அரசாங்க நிறுவனங்கள் அனைத்தினதும் கவனத்தினை ஈர்க்கும் பொருட்டு சுற்றறிக்கை அறிவுறுத்தல்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் அமைச்சரவைக்கு அறிவித்தார்.