2018-08-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அம்பாந்தோட்டை மாவட்டத்தின் மாதிரிக் கிராமங்களின் பயனாளிகளின் மேம்பாட்டுக்காக 08 பாலங்களை நிருமாணித்தல் - அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உட்கட்டமைப்பு வசதிகள் குறைவாகவுள்ள கிராமங்களில் ஆரம்பிக்கப்படும் மாதிரி கிராமங்களின் வீட்டு பயனாளிகளுக்கு நகர பொது வசதிகளின்பால் இலகுவாக அடையக்கூடிய விதத்தில் றம்புக்வெவ வெலிகத்தஆர ஊடான பாலம், முவண்வெவ வீரவிலஆர ஊடான பாலம், பன்னேகமுவ மற்றும் அபயபுர ஊடான தியபெதிய பாலம், அம்பலந்தொட்ட லியனகஸ்தொட்ட, பெந்திகன்தொட்ட ஊடான பாலம், தணமல்வில வீதியின் மலலஆர, ரண்மூதுவெவ பாலம், ரபர்வத்த மற்றும் உடுவில இடையிலான பாலம், கட்டுவன கெசெல்வத்த பாலம், லுணுகம்வெகர தெற்கு கரை ஊடான பாலம் ஆகிய 08 கிராமிய பாலங்களை 'நகமு புரவர' நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நிருமாணிக்கும் பொருட்டு வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |