2018-08-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
விரைவு தபால் சேவை (EMS) பற்றிய ஆசிய பசுபிக் பிராந்திய வருடாந்த மாநாட்டை 2019 ஆம் ஆண்டில் இலங்கையில் நடாத்துதல் - விரைவு தபால் சேவை (EMS) பற்றிய ஆசிய பசுபிக் பிராந்திய வருடாந்த மாநாட்டை வௌிநாட்டு பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் 2019 செப்ரெம்பர் மாதத்தில் இலங்கையில் நடாத்தும் பொருட்டு அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |