• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-08-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
விளையாட்டு பாடசாலைகளுக்கு புலமைப்பரிசில் பெற்றவர்களின் போசாக்கு கொடுப்பனவுத் தொகையை திருத்துத
- விளையாட்டு துறையில் திறமை மிக்க மாணவர்களை தெரிவு செய்து அவர்களுக்கு முறையான பயிற்சியொன்றை வழங்குவதன் மூலம் தேசிய மற்றும் சருவதேச மட்டத்தில் விளையாட்டு வீரர்களையும் வீராங்கணைகளையும் உருவாக்கும் நோக்கில் விளையாட்டு துறை சார்ந்த பாடசாலைகள் தாபிக்கப்பட்டுள்ளன. இந்தப் பாடசாலைகளில் பயிற்சிகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு போதுமான போசாக்கினை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் மாணவர் ஒருவருக்கு வழங்கப்படும் மாதாந்த போசாக்கு கொடுப்பனவை 2,500/- இலிருந்து 5,000/- ரூபா வரை அதிகரிக்கும் பொருட்டு கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.