• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-08-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மஹபொல உயர் கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் முதலீடுகளை முறைப்படுத்துதல்
- சலுகை கிடைக்கப்பெறாத இளைஞர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகளை உருவாக்குதல் அதற்கான வசதிகளை வழங்குதல் மற்றும் விருத்தி செய்தல் மஹபொல புலமைப்பரிசில் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் குறிக்கோளாகும். மஹபொல பிரதான நிதியத்தை பலப்படுத்துவதற்காக அதன் நிதியங்களை முதலீடு செய்வது மஹபொல நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் முழுமையான உரிமையின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள National Wealth Corporation Limited கம்பனி மற்றும் National Wealth Securities Limited கம்பனி என்பவற்றின் ஊடாக மேற்கொள்ளப்பட்டடுள்ளன. ஆயினும் இந்த கம்பனிகளின் செயற்பாடுகள் காரணமாக மஹபொல நம்பிக்கை பொறுப்பு நிதியத்திற்குப் பாதகமான நிலைமைகள் உருவாகியுள்ளமையினால் மஹபொல நம்பிக்கை பொறுப்பு நிதியத்திற்குரிய முதலீடுகளை முறைப்படுத்துவதற்கும் மேற்போந்த இரண்டு கம்பனிகளையும் கலைத்து மூடி மஹபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை பொறுப்பு நிதியத்திற்குச் சொந்தமான நிதியங்கள் சகலவற்றையும் அரசாங்க வங்கிகள் மற்றும் மத்திய வங்கி முறிகளில் மாத்திரம் முதலீடு செய்வதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கும் பொருட்டு உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்‌ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.