2018-08-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தேசிய கட்டங்கள் ஆராய்ச்சி அமைப்பினால் இலங்கையில் இரசாயன அனர்த்த அபாயங்களை அடையாளம் காண்பதற்கு முறையான மதிப்பீ - தேசிய கட்டங்கள் ஆராய்ச்சி அமைப்பினால் நடாத்தப்பட்ட ஆய்வொன்றிற்கூடாக, இலங்கையில் இரசாயன பதார்த்தங்களுடன் தொடர்பு பட்ட கூடுதலான விபத்துக்களானவை அப்பதார்த்தங்கள் பற்றிய அறிவின்மை, அப்பதார்த்தங்களைப் பயன்படுத்தும் மனையிடங்கள் முறையாக பராமரிக்கப் படாமை, மேற் பார்வையில் கவனயீனம் மற்றும் தொழினுட்பங்களின் முறையற்ற பாவனை தொடர்பிலேயே நிகழ்கின்றன என்பது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இச்சூழ் நிலையை கருத்திற் கொண்டு தீர்ப்பதற்கான தீர்வு நடவடிக்கை யொன்றாக முறைசார்ந்த அனர்த்த முகாமைத்துவ கட்டமைப்பொன்றை தயாரிப்பதற்கான தேவைப்பாட்டை கருத்திற் கொண்டு, இலங்கையில் இரசாயன அனர்த்த அபாயங்களை அடையாளம் காண்பதற்கு முறையான மதிப்பீடொன்றை 2019-2020 ஆண்டுகளுக்கிடையில் நடாத்தும் பொருட்டு நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |